Sunday, December 26, 2010

கடவுள் வாழ்த்து

1. கடவுள் வாழ்த்து

1. இறை வாழ்த்து

1. அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றெ யுலகு

அகரம் முதல, எழுத்து எல்லாம்;-ஆதி
பகவன் முதற்றெ, உலகு.

A begins the alphabets
And God, primordial, the world.

ஏழுத்துகள் எல்லாம் அகர ஒலியை முதலாகவும் அடிப்படையாகவும் உடையமன.காணப்படும் இவ்வுலகமும் ஆதிபகவனாம் இறையை முதலாகவும் அடிப்படையாகவும் உடையது. இவ்வுலகத் தோற்றத்துக்குக் காரணமாய், உடனுறையும் பேராற்றலை ஒப்புமை அளவையால் நிறுவுகிறது.

கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை: 
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை: 
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

Translation: 
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.
Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

2. கற்றதனா  லாய பயனென்கொல்  வாலறிவ
    னற்றா டொழாஅ ரெனின்

No comments:

Post a Comment